திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் எடமலைபட்டிபுதூர் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது ராம்ஜிநகர் மில் காலனி பகுதியைச் சேர்ந்த கி. ஜெயசீலன் ( வயது 47) என்பவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.