Rock Fort Times
Online News

விபத்தில் சிக்கிய காரில் மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள்…

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், காமலாபுரம் புதூரைச் சேர்ந்தவர் பூபதி. இவர் நேற்று தனது புல்லட்டில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்றபோது கிருஷ்ணகிரியில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்று புல்லட் மீது மோதியது. இதில் காரின் முன் பகுதி சேதம் அடைந்தது. உடனே காரில் வந்தவர்கள் கீழே குதித்து தப்பி ஓடி விட்டனர். இந்த விபத்தில் பூபதி காயமடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த காரை சோதனையிட்டனர். அப்போது அந்த காரில் மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அந்தப் புகையிலைப் பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்