Rock Fort Times
Online News

மூட்டை, மூட்டையாக தெருவில் கிடந்த ரேஷன் அரிசி…

ஏழை- எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் திருச்சி திருவெறும்பூரில் உள்ள மாநகராட்சி
40-வது வார்டுக்கு உட்பட்ட மலை கோவில் ராஜவீதியில் தலா 50 கிலோ எடை கொண்ட 9 மூட்டை ரேஷன் அரிசி கேட்பாரற்று கிடந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் திருவெறும்பூர் வட்ட வழங்கல் அலுவலர் நாகலட்சுமிக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், அவர் மற்றும் திருவெறும்பூர் போலீசார் விரைந்து வந்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த ரேஷன் அரிசிக்கு யாரும் உரிமை கோராததால் அதனை எடுத்துச் சென்றனர். அந்த ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டதா?, இந்த இடத்தில் வீசப்பட்டது ஏன்? இதில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்