தாய்லாந்தில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் பண்டல், பண்டலாக கடத்திவரப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்…!
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட உள்நாடுகளுக்கும், மலேசியா, சிங்கப்பூர், துபாய், தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்தும் திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில் தாய்லாந்தில் இருந்து ஏர்ஏசியா விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பயணி பண்டல், பண்டலாக சிகரெட் பாக்கெட்டுகளை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அவற்றை கொண்டு வருவதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லாததால் அந்த சிகரெட் பண்டல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் ஆகும். இதுகுறித்து அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.