திருச்சி மாவட்டத்தில் ரூ.1.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடங்கள்…* அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்!
திருச்சி மாவட்டம், பூவாளுர் பேரூராட்சியில் மூலதன மானிய நிதி திட்டத்தின்கீழ் ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடத்தினையும், அயோத்தி தாசர் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூட கட்டிடத்தையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (22-08-2025) திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்திரபாண்டியன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் துவாரகநாத்சிங், செயற்பொறியாளர் சுப்பிரமணியன், பேரூராட்சி தலைவர் புவனேஸ்வரி பால்ராஜ் மற்றும் செயல் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.