திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்- * கிழக்கு மாநகர செயலாளர் மு மதிவாணன் பங்கேற்பு!
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், கிழக்கு மாநகரம் பொன்மலை பகுதியில் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி கல்கண்டார் கோட்டையில் தமிழக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. பகுதி கழகச் செயலாளர் கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ் தலைமை தாங்கினார். 44- வது வட்டக் கழகசெயலாளர் எம்.சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், தலைமைக் கழக பேச்சாளர் மதுக்கூர் மெட்ரோ சேகர், இளம் பேச்சாளர் பாலக்கரை விஜயலட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் 44 (அ) வட்டக் கழகச் செயலாளர் எஸ். துரை நன்றி கூறினார். கூட்டத்தில், மாநகரக் கழக நிர்வாகிகள் நூர்கான், சந்திரமோகன் , பொன்.செல்லையா, சரோஜினி, வெங்கட்ராஜ், கோட்டத் தலைவர் ஜெயநிர்மலா, மாமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், பியூலா மாணிக்கம், சீத்தாலட்சுமி, முருகானந்தம் மற்றும் மாநகர, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.