Rock Fort Times
Online News

லஞ்சம் வாங்கிய வழக்கு: வேளாண்மை அலுவலர் உட்பட 2 பேருக்கு சிறை தண்டனை…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கொணலையை சேர்ந்த அசோக்குமார் என்பவர் தனது சித்தப்பா பெயரில் வாங்கிய டிப்பர் லாரி மற்றும் டிராக்டரை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த சான்றிதழ் வேண்டி கடந்த 2007ம் ஆண்டு மண்ணச்சநல்லூர் வேளாண்மை அலுவலர் நாகராஜனை அணுகியுள்ளாா். அதற்கு அவர், சான்றிதழ் வழங்க ரூ.1000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத அசோக்குமார் இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ஆலோசனையின்பேரில் அசோக்குமார் லஞ்சப் பணத்தை உதவி வேளாண்மை அலுவலர் சின்னதுரை என்பவர் மூலம் நாகராஜன் பெற்ற போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர் .இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிமன்ற விசாரணை முடிவடைந்து இன்று ( 29.11.2023 ) தீர்ப்பளிக்கப்பட்டது. லஞ்சம் கேட்டு பெற்ற குற்றத்திற்காக வேளாண்மை அலுவலர் நாகராஜனுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூ.10,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால், மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் மற்றும் அரசு பதவியை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், உதவி வேளாண்மை அலுவலர் சின்னதுரைக்கு அரசு பதவியை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு மேற்கண்ட தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டாா்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்