சென்னையில் உள்ள ஒரு பள்ளிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் இன்று (04-03-2024) தமிழகத்தில் உள்ள
2 பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாங்காடு அருகே கிருகம்பாக்கம் தனியார் பள்ளி மற்றும் கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு இரு பள்ளிகளிலும் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.