Rock Fort Times
Online News

பாஜக பிரமுகா் ஜாமீனில் விடுவிப்பு….

ஒரு வழக்கு சம்பந்தமாக பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் திருவாடானையை சேர்ந்த பரணிதரன் என்பவர் மீது கடந்த 7.9 2023ல் 153(A) 504, 505(2), IPC ஆகிய சட்டபிாிவுகளின் கீழ் ஸ்ரீரங்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து அன்றைய தினமே அவரை கைது செய்தாா். பின்னா் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். அவரை ஜாமீனில் விடுவிக்ககோரி , திருச்சி மாநகர் மாவட்ட  பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் ரா.முத்து மாணிக்கவேலன் ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வாதாடினார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, பரணிதரனை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார். அப்போது வழக்கறிஞா் பிாிவு துணை தலைவர் மணிகண்டன், செயலாளர் முத்துகுமார், கதிரேசன், மண்டல் வழக்கறிஞர் பிரிவு தலைவர் சந்திரசேகர், வழக்கறிஞர் நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்