சோழவரம் அருகே நீர்விழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சுற்றுலா சென்ற கல்லுாாி மாணவா் ஒருவா் விபத்தில் பலியானாா். ஒருவா் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். சென்னை மேடவாகத்தை சேர்ந்த இளைஞர்கள் 12பேர் 6 இருசக்கர வாகனங்களில் ஆந்திர மாநிலம் தடா நீர்விழ்ச்சிக்கு சுற்றுலா சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. சோழவரம் அடுத்த காரனோடையில் இருசக்கர வாகனம் ஒன்று அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணித்த கோபிநாத் என்ற கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கிறிஸ்டோபர் சாலமன் என்ற கல்லூரி மாணவர் படுகாயங்களுடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.