பெரம்பலூரில் வருகிற 19-ந் தேதி மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள அருண் நேரு எம்.பி. அழைப்பு…!
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை, லால்குடி, முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டோருக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 19-10-2024( சனிக்கிழமை) அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 120-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான பணி வாய்ப்புகளை வழங்க உள்ளன. 5-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் ஐடிஐ, டிப்ளமோ, அக்ரி, நர்சிங், பி.எட்.பார்மசி, பி.இ, பி.டெக், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பதிவு செய்யப்படும். சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்ற நிறுவனங்களின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Comments are closed.