Rock Fort Times
Online News

கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் ராஜவேல் பல்வேறு துறைகளில் பல கோடி ரூபாய் முறைகேடு..! பல்கலைக்கழகங்களின் வேந்தர் ஆர்.என்.ரவி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 9 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தர பதிவாளர் பதவி நியமிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், பதிவாளராக பேராசிரியர் இரா.ராஜவேல் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளன. பதிவாளரின் நடவடிக்கையால் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியின் சுமூகமான செயல்பாடுகள் சீர்குலைந்து இருப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள் முன்வைக்கின்றனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், குறுகிய காலத்தில் அதிகமான சுயநிதி கல்லூரிகளுக்கு புதிய தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டு அந்த கல்லூரிகளிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். முதல்வர் மற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான தகுதி ஒப்புதல் GO MS.NO.5, 2021-ன் படி முறையான நடைமுறையைப் பின்பற்றாமல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிகள் அனைத்தையும் பழைய காகிதப் பணிகளுடன் செய்யமாறு பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றமற்ற அதிகாரி டாக்டர் பி. அன்பழகனை சர்வதேச விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார். முன்னாள் துணைவேந்தர் கணபதி மீது பதிவு செய்யப்பட்ட DVAC Fir-ன் படி அவர் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியாக இருந்தார். மேலும் அவர் பதிவாளருக்கு தரகராகவும் செயல்படுகிறார். முன்னாள் சிண்டிகேட் மற்றும் கோவை அரசு கல்லூரியைச் சேர்ந்த ஒரு பேராசிரியர், கல்லூரி உரிமையாளர்களுக்கும், பதிவாளருக்கும் இடையே தரகு பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார். கட்டிட வேலைகள் போன்றவற்றை கையாள்வதற்காக அலுவலக நேரத்திற்கு பிறகு பல கட்டிட ஒப்பந்ததாரர்கள் சந்திப்பது ஏன்?. இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவாளர் மீது முன் வைக்கின்றனர். இதுதொடர்பாக பல்கலைக்கழகங்களின் வேந்தர் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரிய விசாரணை நடத்தி பதிவாளர் ராஜவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்