பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய புனித தலங்களுக்கு பக்தர்கள் செல்வது வழக்கம். ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்கு சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். குளிர்காலங்களில் குகைக்கோவில்கள் மூடப்பட்டுவிடும். இந்த ஆண்டுக்கான யாத்திரை வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி அன்று கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களுக்கு தொடங்குகிறது. தொடர்ந்து ஏப்ரல் 25ஆம் தேதி கேதார்நாத் கோவில் யாத்திரையும் ஏப்ரல் 27ஆம் தேதி பத்ரிநாத் கோவில் யாத்திரையும் தொடங்குகிறது.
