திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 5000 சதுரடி இடத்தை வளைத்துப்போட முயற்சி ! பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம்
திருச்சி,ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே புலி மண்டபம் உள்ளது. இதையொட்டி மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 5 ஆயிரம் சதுர அடி இடம் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், திடீரென்று உள்ளூர் திமுக பிரமுகர் மற்றும் தனியார் அமைப்பை சேர்ந்த சிலர் மாநகராட்சி இடத்தை சுற்றி அரளைக்கற்களைக் கொண்டு சுவர்களை எழுப்ப முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்தியதோடு, முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அரசு இடத்தை ஆக்ரமித்தது குறித்த ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். இதனடிப்படையில் அப்பகுதிக்கு வந்த அதிகாரிகள் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டனர். வருங்காலத்தில் இதுபோன்ற ஆக்கிரமிப்பு செயல்கள் நடக்காத படி நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்கள் விளையாட மைதான வசதியின்றி இயங்கி வரும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இந்த காலி இடத்தை பயன்படுத்த வசதி செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.