Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 1 கோடியே 14 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்…

சிங்கப்பூரில் இருந்து தனியார் விமானம் ஒன்று நேற்று ( 18.09.2023 ) திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை இட்டனர். அப்போது பயணி ஒருவர் தனது உடையில் மறைத்து கடத்தி வந்த 1 கிலோ 920 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அவற்றின் இந்திய மதிப்பு ரூ. 1 கோடியே 14 லட்சத்து 24 ஆயிரம் என்று அதிகாரி ஒருவர் மதிப்பிட்டார். அந்த தங்கத்தை அவரிடம் கொடுத்து அனுப்பியது யார்?, யாரிடம் கொடுக்கச் சொன்னார்கள்? என்று பிடிபட்டவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்