நெல்லை மாவட்ட காவல்துறையில் அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் பல்பீர் சிங். இவர் ஏஎஸ்பியாக பொறுப்பேற்ற பிறகு அம்பாசமுத்திரம் பகுதியில் சின்ன குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களின் பற்களை கட்டிங் பிளேடு கொண்டு பிடுங்கி கொடூரமான தண்டனை வழங்கி வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. கலெக்டர் இந்த விஷயத்தில் தலையிட்டு எஸ்பி மூலம் ஏ.எஸ்.பி.ஐ காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பினார் .இந்த நிலையில் இந்த கொடூரமான செயல் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு வந்தது. தெளிவாக அனைத்தையும் கேட்டு அறிந்த ஸ்டாலின் சட்டசபையில் ஏ.எஸ்.பி பல்பீர் சிங்கை சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார்.