Rock Fort Times
Online News

நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று (டிச.3)கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா?* பதற்றம்-போலீசார் குவிப்பு!

கார்த்​திகை தீபத்​தையொட்டி இன்று (டிச. 3) திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை இன்று முதல் நடைமுறைப்படுத்த கோரி வழக்கு தொடர்ந்த ராமரவிக்​கு​மார் மற்றும் இந்து அமைப்​பினர் கோயில் நிர்​வாகத்​திடம் நேற்று மனுக்​களை அளித்​தனர். நீதிமன்ற உத்தரவை நடை​முறைப்படுத்த தவறி​னால், நாங்களே தீபத்​தூணில் தீபம் ஏற்றுவோம்’ என்​றும் அவர்​கள் கூறியதாக தெரிகிறது. இதனால் அங்கு பதற்​றம் நிலவுகிறது. இதையடுத்​து, மதுரை மாநகர காவல் ஆணை​யர் லோக​நாதன் மேற்​பார்​வை​யில், துணை ஆணை​யர் இனிகோ திவ்யன் தலை​மை​யில் 500-க்​கும் மேற்பட்ட போலீ​ஸார் குவிக்​கப்​பட் டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்​பில் கூறுகையில், “கோயில் நிர்வாகம் சார்​பில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுத்​தால், உரிய பாது​காப்பு வழங்​கப்​படும். ஆனால் யாரும் மலைக்கு மேல் செல்ல அனு​மதி கிடை​யாது’ என்​றனர். இதனிடையே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும், அதுவரை அந்த உத்தரவை செயல்படுத்த இடைக்காலத் தடைகோரியும் திருப்பரங்குன்றம் கோயில் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்