கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாரூரில் திறப்பு விழா காண இருக்கும் கலைஞர் கோட்ட திறப்பு விழா நிகழ்வு அன்று திருச்சி தெற்கு மாவட்ட மாநகர மாணவரணி சார்பாக கலைஞர் சுடர் ஏந்தி திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு திருவாரூர் கலைஞர் கோட்டம் வரை சென்றடைந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் ஜோதி ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் முன்னிலையில் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான
கே என் நேரு துவங்கி வைத்தார்

நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முத்து வெங்கடேஷ் மாநகர மாணவரணி அமைப்பாளர் அசாருதீன் பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.