Rock Fort Times
Online News

திருச்சி, அரியமங்கலத்தில் ஆயுதங்களுடன் 7 ரவுடிகள் கைது- கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது அம்பலம்…!

திருச்சி, திருவெறும்பூர் காட்டூர் அம்மன் நகர் பகுதியில் ஒரு காலியிடத்தில் மர்ம கும்பல் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பதாக அரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 7 பேரும் ரவுடிகள் என்பதும், இவர்கள் அந்தப் பகுதியில் கொள்ளையடிக்க ஒன்றிணைந்து திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து காட்டூர் அம்மன் நகர் பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (வயது 35), அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் குமார் ( 21), சூர்யா (21), மணிகண்டன் ( 22), ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த சுதர்சன் (34), கூத்தூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் ( 24), நவல்பட்டு பகுதியை சேர்ந்த ரசாக் ( 40)ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு கத்தி மற்றும் ஆயுதங்களை கைப்பற்றினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்