Rock Fort Times
Online News

மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்: உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் குழந்தை உட்பட 7 பேர் பலி…!

உத்தரகாண்டில் கேதார்நாத் தாமில் இருந்து சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில், விமானி மற்றும் குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர். உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் தாமில் இருந்து குப்தகாஷிக்கு சென்று கொண்டிருந்த ஆர்யன் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் கவுரிகுண்ட் காடுகளில் விழுந்து நொறுங்கியது. இந்த ஹெலிகாப்டரில் விமானி மற்றும் குழந்தை உட்பட 7 பேர் பயணித்துள்ளனர். கேதார்நாத் தாமில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு குப்தாஷிக்கு ஹெலிகாப்டர் திரும்பி கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். அவர்கள் நீண்டநேரம் போராடி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் விமானி மற்றும் குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர். அவர்கள் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த ஜூன் 12ம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் விமான விபத்து ஏற்பட்டு 270 பேர் உயிரிழந்த சுவடு மறைவதற்குள் அடுத்து ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்