Rock Fort Times
Online News

திருச்சி மருந்து கம்பெனியில் வேலை பார்த்த ஊழியர் சாலை விபத்தில் உயிரிழப்பு-* தப்பி ஓடிய லாரி டிரைவருக்கு வலை… (வீடியோ இணைப்பு)

ராமநாதபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் திருச்சியில் உள்ள ஒரு மருந்து கம்பெனியில் பணியாற்றி வந்தார். அவர் இன்று( மே 29) பணிக்காக புத்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு டிப்பர் லாரி, கிருஷ்ணன் ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது அந்த லாரி ஏறி இறங்கியது. இதில் கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த பகுதிக்கு அருகே பள்ளம் தோண்டப்பட்டுள்ளதாகவும், அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய லாரியின் பதிவெண் கருப்பு மை கொண்டு மறைக்கப்பட்டு இருந்தது. அந்த லாரி யாருடையது?, அதன் டிரைவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி
டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்