திருச்சி, மேல சிந்தாமணி, காவேரி நகரை சேர்ந்தவர் ராபர்ட் க்ளைவ் (34). எலக்ட்ரீஷியன். மது அருந்தும் பழக்கம் உள்ள இவர் தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து 2 -வது மாடியில் உள்ள தண்ணீர்தொட்டி மீது படுத்து தூங்குவாராம்.வழக்கம்போல சம்பவத்தன்று தண்ணீர் தொட்டி மீது தூங்கிய அவர் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ஜெயம் அமிர்தவள்ளி அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.