திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி, அங்குள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்தநிலையில் இன்று (5-11-2023) காலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மாணவி வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து சிறுமியை கடத்திச் செல்ல முயன்றுள்ளார் . அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பொதுமக்களை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .
இச்சம்பவம் குறித்து மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து பள்ளி மாணவியை கடத்த முயன்ற வாலிபர் யார்?, எதற்காக கடத்த முயன்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதோடு அவரை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து மாணவியை கடத்த முயன்ற சம்பவம் மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Comments are closed, but trackbacks and pingbacks are open.