திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர்கள் இளைஞர்கள் தலைமையில் மாபெரும் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து எருது விடும் திருவிழாவில் முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட, விழா குழுவினர் உறுதிமொழி ஏற்ற பின் வாடிவாசல் திறக்கப்பட்டு காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆம்பூர் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்ட இந்த எருது விடும் திருவிழாவில் முதல் பரிசாக 3 சவரன் தங்க காசு, இரண்டாவது பரிசாக இரண்டு கிராம் தங்க காசு, மூன்றாம் பரிசாக ஒரு கிராம் தங்க காசு என மொத்தம் 40 பரிசுகள், குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் ஓடி வெற்றி பெற்ற காளைகளுக்கு வழங்கப்பட்டது.இந்த எருது விடும் திருவிழாவிற்கு முறையான அனுமதி பெற்று தீயணைப்புதுறை, காவல்துறை, மருத்துவத்துறை உதவியுடன் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விழா நடைபெற்றது.