தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் மாதவரம் முதல் திருச்சி வரை 3 புதிய குளிர்சாதன பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி மாதவரத்தில் இருந்து பிற்பகல் 12-15 மணிக்கு புறப்பட்டு திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் மு. கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை ஒரு பேருந்தும், இங்கிருந்து இரவு 9- 50 மணிக்கும், இரவு 11-25 மணிக்கு புறப்பட்டு மாதவரம் வரை செல்லும் 2 புதிய பேருந்துகளை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் .அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், தொழில்துறை அமைச்சர் டி .ஆர். பி. ராஜா ஆகியோர் இன்று (ஜூலை 30) கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக வாரிய தலைவர் கௌதமன், போக்குவரத்து கழகம் விழுப்புரம் மேலாண் இயக்குனர் குணசேகரன், திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் சதீஷ்குமார மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments are closed.