அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் விழுப்புரத்தில் நடு ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு வந்த காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.அப்போது பத்திரிகையாளரிடம் பேட்டி அளித்த எம்பி சி.வி சண்முகம் கடந்த சில மாதங்களாக எனக்கு ஃபோனிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் இது குறித்து 21 முறை போலீசாரை சந்தித்து புகார் கொடுத்துள்ளேன். ஆனால் புகார்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என கூறினார். என் மீதான கொலை மிரட்டல் புகார்கள் குறித்து திண்டிவனம் மற்றும் விழுப்புரத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமிலும் பல்வேறு புகார் கொடுத்துள்ளேன். அதேபோல வாட்ஸப்பில் என்னை கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தி செய்திகளை பதிவிட்டு வருகின்றனர். அதையும் நான் புகாராக கொடுத்தேன். இரண்டு ஆண்டுக. ஆகிறது.அதற்கும் இதுவரை போலீசாரிடம் இருந்து பதில் வரவில்லை.
இதற்கெல்லாம் மேலாக ஒரே நாளில் எனக்கு கிட்டத்தட்ட 400 தொலைபேசி அச்சுறுத்தல் அழைப்புகள் வருகின்றன. அதுகுறித்து நான் கொடுத்த புகாரில் இன்று வரை வழக்கு பதிவு செய்யவில்லை. . வீடேறி உள்ளே வந்து உன்னை கண்டம் துண்டமாக வெட்டி வீசுவேன் என்று பதிவிட்டவரை அட்ரஸோடு புகார் கொடுத்தும் அவரைக் கூப்பிட்டு காவல்துறை மன்னித்து அனுப்புகிறார்கள். இவர்களுக்கு யார் இந்த அதிகாரத்தை என கொடுத்தது.விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் கொடுக்க செல்லும்போதெல்லாம் அவர் அலுவலகத்தில் இருப்பதே இல்லை. அதையும் மீறி தொடர்பு கொண்டால் டிஜிபியிடம் கான்ஃபரன்ஸில் இருக்கிறார். ஐஜியிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என சாக்குப் போக்குகளை சொல்லி புறக்கணிக்கின்றனர். ஒரு எம்.பியான எனது உயிருக்கே உத்திரவாதம் இல்லாத சூழ்நிலையில் தான் என்ற திமுக அரசு உள்ளது என்று கூறினார்.
Comments are closed.