அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை ( 21.11.2023 ) நடக்கிறது. இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப்பணி குறித்து மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. தலைமை கழக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் .இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.