அதிமுகவின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் சோமரசம்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் ஏழை, எளியோருக்கு இனிப்பு வழங்கியும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா். நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் பொன்.செல்வராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், முத்துக்கருப்பன், ஆமூர் ஜெயராமன், செல்வராஜ் , கவுன்சிலர் கார்த்திக், சமயபுரம் ராமு, நடேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.