திருச்சி உறையூரில் துணிகரம்:-கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை..! வாலிபர் கைது-சிறுவன் தப்பி ஓட்டம்
திருச்சி, உறையூரில் பிள்ளையார் கோயில் உண்டியலில் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி உறையூர், பாளையம் பஜாரைச் சேர்ந்தவர் மகாமுனி (68). அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலின் மேர்பார்வையாளராக உள்ளார். சம்பவத்தன்று கோவிலை பூட்டிவிட்டு சென்றார். காலை கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து மகாமுனி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் உறையூர், குறத்தெரு, சாராயப்பட்டறையைச் சந்தைச் சேர்ந்த விஜயராஜ் (19) என்ற வாலிபரை கோயில் உண்டியலை கொள்ளையடித்ததாக போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர்.

Comments are closed.