திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் துணிகரம்: இன்ஜினியர் உள்பட 2 பேரை கத்தியால் குத்தி செல்போன், மோட்டார் சைக்கிள் பறிப்பு…!
மதுரை முனியாண்டி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 30). இவர் சென்னை- திருச்சி பைபாஸ் சாலையில் கொண்டையம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர், தனது நண்பர் விஷால் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இருவரும் கம்பெனிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து கத்தியால் குத்தி அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசில் சுரேந்தர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.