திருச்சி உறையூர் ராமலிங்க நகர் சிண்டிகேட் பேங்க் காலனியில் வசித்து வருபவர் கடற்கரைவேல் (வயது 63).இவர் திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இயங்கி வரும் மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த 17ந்தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு ஜெர்மனியில் இருந்து வரும் தனது மருமகளை அழைத்து வருவதற்காக சென்னை சென்று இருந்தார். பின்னர் 18 ந்தேதி மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 17 பவுன் நகைகள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் குற்றப்பிரிவு ஆய்வாளர் பாத்திமா வழக்கு பதிந்து, இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர்களை தேடி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.