Rock Fort Times
Online News

ரெயில்வே தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு…!

ரெயில்வே தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரெயில்வே தேர்வு எழுத செல்லும் மாணவர்களின் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்படுகின்றன. அதன்படி, எர்ணாகுளம்-கண்ணூர், திருச்சி- திருவனந்தபுரம், திருவனந்தபுரம்-குருவாயூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் (வண்டி எண்-16305, 22627, 16342) இன்று (04-03-2025) முதல் வருகிற 18-ந் தேதி வரை கூடுதலாக ஒரு 2-ம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்படுகிறது. அதேபோல, கண்ணூர்-ஆலப்புழா, ஆலப்புழா-கண்ணூர், குருவாயூர்- திருவனந்தபுரம், திருவனந்தபுரம்-திருச்சி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் (16308, 16307, 16341, 22628) இன்று முதல் 19-ந் தேதி வரை கூடுதலாக ஒரு 2-ம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்