Rock Fort Times
Online News

திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே விபத்து:- ஆம்னி பஸ் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலி…!

திருச்சி மாவட்டம், நாகமங்கலம், மேக்குடி வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (வயது 49). முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்த அவர் பணி முடிந்து இன்று (ஆகஸ்ட் 15) காலை தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பஞ்சப்பூர் பஸ் நிலையம் அருகே வந்தபோது திருச்சியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து எதிர்பாராதவிதமாக மைக்கேல்ராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மைக்கேல்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், மைக்கேல் ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்