Rock Fort Times
Online News

திருச்சியில் செயல்படும் பிரபல நகைக்கடையில் தங்க நகைகள் அபேஸ் – 3 ஊழியர்கள் கைது !

திருச்சி என்.எஸ்.பி ரோட்டில் பிரபல தனியார் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு அண்ணா நகரை சேர்ந்த சுகன்யா, பெட்டவாய்த்தலையை சேர்ந்த கார்த்திக் மற்றும் அனார்கலி ஆகிய மூன்று ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் 5 பவுன் தங்க நகைகளை இந்த மூன்று பேரும் கூட்டு சேர்ந்து திருடியுள்ளனர்இதனை கண்டுபிடித்த மேலாளர் பிரசன்னகுமார் இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று பேரிடமும் விசாரணை நடத்தினர்.அப்போது தங்க நகைகள் திருடியதை மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்க ளை போலீசார் கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் இங்கு பணிபுரியும் சக ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்