ஆட்டம் – பாட்டம் – கொண்டாட்டம்! பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைகழகத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ( போட்டோக்கள் இணைப்பு )
உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவ பெருமக்களால் கிறிஸ்து பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் கிறிஸ்துமஸ் தின விழா இன்று ( டிச.24 )கோலாகலமாக கொண்டாடப்பட்டது.பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் தலைமை தாங்கினார். விழாவில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த மாணவர்கள் விழாவிற்கு வந்திருந்தவர்களை வரவேற்று மகிழ்ந்தனர்.இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய பல்வேறு தகவல்களுடன் தத்ரூபமாக பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.இதையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ – மாணவிகள் மகிழ்ச்சி ததும்ப தங்களது சந்தோஷத்தை ஆடி பாடி கொண்டாடினர்.இறுதியில் கிறிஸ்து பிறப்பை பற்றிய உபவாச ஜெபங்கள் நடைபெற்றன. இதில் மாணவ – மாணவிகள் பேராசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.