திருச்சி, அரியமங்கலம் அம்மையார் தெருவை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரது மகன் தீபக் (வயது 28. ). இவர் கடந்த 2ந் தேதி குட்ஷெட் பாலம் அருகே எலி மருந்து உட்கொண்டுள்ளார். இதை தன் சக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். ,இதையடுத்து, அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த தீபக் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.