Rock Fort Times
Online News

கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த வாலிபர் சிக்கினார்…!

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக சமயபுரம் போலீசாருக்கு ரகசிய
தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையிலும், லால்குடி துணை கண்காணிப்பாளர் தினேஷ்குமார் உத்தரவின் பேரிலும் சமயபுரம் காவல் ஆய்வாளர் தயாளன் மற்றும் உதவி ஆய்வாளர் கவிதா ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருப்பதை பார்த்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் லால்குடி அருகே உள்ள தாளக்குடி முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் முருகானந்தம் (24) என்பதும், அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்து
வந்ததும் தெரிய வந்தது. அதன்பேரில் அவரை கைது செய்த போலீசார், அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்