திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வாகனப்போக்குவரத்து நெருக்கடியின்றி நடைபெறும் வகையில் மையத் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மையத் தடுப்புகளில் பூச்செடிகள் மற்றும், மின்சார விளக்குகள் அமைத்தும் மேம்படுத்தப் பட்டுள்ளன. ஆனால் பாதசாரிகள் சாலையைக் கடந்து செல்ல சிறிது தூரம் சுற்றி வர வேண்டியிருப்பதால், பலரும் சுற்றி வராமல் மையத் தடுப்புகளை தாண்டிச் செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு மையத் தடுப்புகளை தாண்டிச் செல்வோர் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதும் தொடர்ந்து வருகின்றது. என்றாலும் ஆபத்தை உணராமல் செல்வதால் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகிறது. அந்தவகையில் திருவெறும்பூர், கக்கன் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேட்டு மகன் தினேஷ் (28) என்பவர் சம்பவத்தன்று இரவு திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில், திருவெறும்பூர் பகுதியில் சாலை மையத் தடுப்பை தாண்டிச்செல்ல முயன்றுள்ளார். அப்போது மையத் தடுப்பில் உள்ள மின் கம்பத்தில் அவர் கை வைத்துள்ளார். அப்போது அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே தினேஷ் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தினேஷ்க்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு மஞ்சுளா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில், அவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்நிலையில் தினேஷ் உயிழந்திருப்பது அவரது குடும்பத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.