Rock Fort Times
Online News

பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவருக்கு அரிவாள் வெட்டு- தடுக்கச் முயன்ற ஆசிரியையும் வெட்டப்பட்டார்…!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் இடையே இன்று (15-04-2025) தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு மாணவரை மற்றொரு மாணவர் அரிவாளால் வெட்டியதில் அவருக்கு தலை, கழுத்து உட்பட பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. இதை தடுக்க முயன்ற ஆசிரியை ஒருவருக்கும் வெட்டு விழுந்தது. இதில், காயமடைந்த மாணவர் மற்றும்
ஆசிரியை இருவரும் தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். மாணவரை அரிவாளால் வெட்டிய சக மாணவரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். சம்பவ இடத்துக்கு திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் தலைமையிலான போலீஸார் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே பென்சில் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த அரிவாள் வெட்டுச் சம்பவம் நடைபெற்றது தெரியவந்துள்ளது.போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் அரிவாள் வெட்டு நடந்த சம்பவம் பாளையங்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்