விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிகவினர் பள்ளிவாசலில் சிறப்பு பிரார்த்தனை..
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற வேண்டி திருச்சி மாநகர் மாவட்ட தே.மு.தி.க சார்பில் நத்தர்ஷா பள்ளிவாசலில் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. மலைக்கோட்டை பகுதி செயலாளர் என்.எஸ்.எம்.மணிகண்டன், தில்லைநகர் பகுதி செயலாளர் சாதிக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரார்த்தனையில் மாவட்ட அவைத்தலைவர் வி.கே.ஜெயராமன், மாவட்ட துணை செயலாளர்கள் ப்ரீத்தா விஜய் ஆனந்த் , காளியப்பன், மாற்றுத் திறனாளிகள் நல அமைப்பு நிர்வாகி வாஞ்சி குமாரவேல், தொண்டரணி சாகுல் ஹமீது, கலைப்புலி பாண்டியன், வக்கீல் ஐயப்பன், பகுதி செயலாளர்கள் மோகன் , குமார் நிர்வாகிகள் அலெக்ஸ் மாரீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.