Rock Fort Times
Online News

திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த கருத்தரங்கம்…!

முத்தமிழறிஞர், கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு இந்திய ஜனநாயக மீட்பு இயக்கம் சார்பாக திருச்சி அரியமங்கலத்தில் அமைச்சர் அன்பில்
மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இளைஞர்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ‘தேசியக் கல்விக் கொள்கையும் இந்தியாவின் எதிர்காலமும்’ எனும் தலைப்பில், மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜும், ‘இன்றைய இளைஞர்களுக்கு இன்றைய சவால்கள்’ எனும் தலைப்பில் எழுத்தாளர்,சமூகச் செயற்பாட்டாளர் ரூபினியும், ‘மதநல்லிணக்கம் தமிழர் மரபு’ எனும் தலைப்பில் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர், அருணன் ஆகியோரும் சிறப்புரையாற்றினார்கள். முன்னதாக ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவப்படம் மற்றும் கருணாநிதி படத்துக்கு அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். முடிவில் கிழக்கு மாநகர கழகச் செயலாளர் மு. மதிவாணன் நன்றி உரையாற்றினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்