மலேசியாவில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை விலங்கினம்…! * பயணியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பயணியின் உடைமையில் அணில் குரங்கு ஒன்று உயிருடன் இருந்தது. அதனை, அந்தப் பயணி விமானத்தில் திருச்சிக்கு கடத்தி வந்துள்ளார். இதனை அடுத்து அந்த அரிய வகை விலங்கினத்தை மீட்ட அதிகாரிகள் இதுகுறித்து வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த அரிய வகை விலங்கினத்தை எதற்காக விமானத்தில் கடத்தி வந்தார்? என அந்த பயணியிடம் தொடந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் தங்கம் மீதான தேவை அதிகரித்து வரும் நிலையில் தங்கம் கடத்தி வருவது தான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இதுபோன்ற அரிய வகை விலங்கினங்கள் கடத்தி வரப்படுவது எதற்காக என்பது தெரியவில்லை. இதுகுறித்து அந்தப் பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.