2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.தலைமையில் புதிய கூட்டணி…
திருச்சியில், மூத்த நிர்வாகி ஏ.கே.மூர்த்தி பேட்டி
பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஏ.கே.மூர்த்தி திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து கட்சியின் நிறுவனத் தலைவர் முடிவு செய்வார். தற்போது வரை பாஜகவிற்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறோம். வருகின்ற 2026 -ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் புதிய கூட்டணி அமைத்து தென் மாவட்டங்களில் அதிக அளவு போட்டியிட உள்ளோம். டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாகபாட்டாளி மக்கள் கட்சியின் தென்மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் திருச்சி அருண் ஓட்டலில் நடைபெற்றது.திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமை தாங்கினார். திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் திலிப்குமார், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் பிரின்ஸ் வரவேற்று பேசினார். திருச்சி மத்திய மாவட்ட தலைவர் சரவணன், திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் செலஸ்டின் செல்வகுமார், திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் வக்கீல் சக்திவேலன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் தாமோதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கூட்டத்தில், முன்னாள் மத்திய மந்திரி மற்றும் வடக்கு மண்டல இணைப் பொதுச் செயலாளர் ஏ.கே . மூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், மாநில பொருளாளர் கவிஞர் திலக பாமா, மாநில துணைத்தலைவர்கள் அய்யம் பெருமாள், திருமலை குமாரசாமி, தேனி, மதுரை ஒருங்கிணைந்த அமைப்பு செயலாளர் முருகானந்தம் ஆகியோர்கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். முடிவில், ஜங்ஷன் பகுதி செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.
கூட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் . திருச்சி மாவட்டம் காவிரி கரையில்மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Comments are closed, but trackbacks and pingbacks are open.