Rock Fort Times
Online News

தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தவர் கழுத்தை கயிறு இறுக்கியதால் பரிதாப மரணம்…

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புது தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் ஜெயக்குமார் (28). இருசக்கர வாகன மெக்கானிக். மது அருந்தும் பழக்கம் உள்ள இவர் சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் தான் தற்கொலை செய்து கொள்வதாக மனைவியை மிரட்டி விட்டு சைக்கிள் மீது ஏறி நின்று அங்குள்ள மரத்தில் கயிற்றால் தூக்கு போட முயன்றுள்ளார். அப்போது சைக்கிள் திடீரென கீழே சரியவே, கயிறு அவரது கழுத்தை இறுக்கியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி நிர்மலா திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெயக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை மிரட்டுவதற்காக தற்கொலை நாடகமாடிய ஜெயக்குமார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்