Rock Fort Times
Online News

சமயபுரம் அருகே சாலையை கடக்க முயன்ற கூலித் தொழிலாளி லாரி மோதி பலி…!

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள தெற்கு ஈச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஜான் (38). கூலி தொழிலாளியான இவர் இருசக்கர வாகனத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை கரியமாணிக்கம் பிரிவு சாலை அருகே கடக்க முற்பட்டபோது
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த எல்லப்பா என்பவர் ஓட்டி வந்த டாரஸ் லாரி மோதியது. இந்த விபத்தில் ஜான் உடல் நசுங்கி பரிதாபமாக
உயிரிழந்தார். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் எல்லப்பா மீது சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்