Rock Fort Times
Online News

திருச்சி நம்பர்ஒன் டோல்கேட் அருகே லாரியில் ஏற்றி வரப்பட்ட ஜேசிபி எந்திரம் கவிழ்ந்து விபத்து…! ( வீடியோ இணைப்பு)

கோயம்புத்தூரில் இருந்து திருச்சிக்கு ஜேசிபி எந்திரத்தை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. லாரியை மதுரையை சேர்ந்த கருப்புசாமி (45) என்பவர் ஓட்டி வந்தார். திருச்சி, நம்பர் ஒன் டோல்கேட் ஒய் ரோடு அருகே அந்த லாரி சாலையை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக லாரியில் இருந்து ஜேசிபி எந்திரம் சாலையின் நடுவே விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிரேன் எந்திரத்தின் மூலம் ஜேசிபி எந்திரத்தை மீட்டு அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். தேசிய நெடுஞ்சாலையில் நான்கு சாலைகள் சந்திக்கும் சிக்னல் பகுதியில் நடந்த இந்த விபத்தினால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்