வேலை தேடும் இளைஞர்களுக்கு முத்தான வாய்ப்பு:- திருச்சியில் மார்ச் 21ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…!
படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு திருச்சியில் மார்ச் 21ம் தேதி தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதுதொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் மார்ச் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. முகாமில், தனியார் துறைகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்ததனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் படிப்புகள் போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது பயோடேட்டா மற்றும் அனைத்து கல்வி சான்றுகள், நகல்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்திற்கு நேரில் வந்து முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்திறனை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901, 94990-55902 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.