திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்காட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் வசிப்பவர் ராணி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சிலர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எதேச்சையாக அங்குள்ள கிணற்றை அவர்கள் எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது கிணற்றில் பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசுவின் உடல் மிதந்தது.
இதுகுறித்து துறையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் துறையூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சிசுவின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறந்து சில நாட்களே ஆன சிசுவின் உடலை கிணற்றில் வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.