திருச்சி ராம்ஜி நகர் அருகே கொடுக்கல் – வாங்கலில் தகறாறு !- மண்டை உடைந்ததில் இருவர் மருத்துவமனையில் அனுமதி !
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட நவலூர் கொட்டப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம். இவருக்கும் அதே அலுவலகத்தில் க்ளர்க்காக பணியாற்றி வந்த பழனிசாமி என்பவருக்கும் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இன்று அது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இருவரும் வந்துள்ளனர். அப்போது பேச்சுவார்த்தை முற்றியதில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். அதில் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து ஒருவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், மற்றொருவர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் குறித்து ராம்ஜி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.