Rock Fort Times
Online News

திருச்சியில் ஜூலை 3-ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்… * மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!

திமுக அரசைக் கண்டித்தும், திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரியும், ஜங்ஷன் மற்றும் மாரிஸ் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க கோரியும், பாலக்கரையில் இருந்து பீமநகரை இணைக்கும் வேர்ஹவுஸ் பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்கவும், பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க கோரியும் ஜூலை 3ஆம் தேதி மரக்கடை எம்ஜிஆர் திடலில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமையிலும், திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் முன்னிலையிலும்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
திருச்சி தில்லை நகரில் உள்ள மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில், பகுதி கழக செயலாளர்கள் அன்பழகன், பூபதி, ரோஜர், கலீலுல் ரகுமான், கலைவாணன், வாசுதேவன், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பி.ரஜினிகாந்த், கருமண்டபம் சுரேந்தர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் அறிவிப்பின்படி கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்